கடலூரில் காதல் ஜோடிக்கு தனது சொந்த செலவில் காவல் ஆய்வாளர் திருமணம் நடத்தி வைத்தார்.
கடலூர் அருகே உள்ள பெரிய கங்கணாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ் (21). இவருக்கும் ஆந்திரா மாநிலம் சூலூர்பேட்டையை சேர்ந்த சுஜிதா (21) என்பவருக்கும் முகநூல் வழியாக பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியது.
இந்நிலையில் சுஜிதாவின் வீட்டில் வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்ததாக கூறப்படுகிறது. இதனால் சுஜிதா தன்னுடைய காதலனை கரம் பிடிக்க ஆந்திராவில் இருந்து ரயில் மூலம் கடலூர் வந்தார். அவருக்கு தமிழ் தெரியாததால் ரயில் நிலையத்தில் நின்று கொண்டு எங்கு செல்வது என்று தெரியாமல் இருந்த நிலையில் ரயில்வே ஊழியர்கள் கடலூர் அனைத்து மகளிர் போலீஸ் ஆய்வாளர் மகேஸ்வரிக்கு தகவல்
தெரிவித்ததனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்தப் பெண்ணிடம் விசாரணை நடத்தி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அப்போது சுஜிதா நடந்த சம்பவங்கள் குறித்து ஆய்வாளர் மகேஸ்வரியிடம் தெரிவித்ததையடுத்து சுஜிதாவின் காதலன் வெங்கடேஷூக்கு தகவல் தெரிவித்து காவல் நிலையத்திற்கு வரவழைத்து இருவரிடம் விசாரணை நடத்தி காவல் ஆய்வாளர் மகேஸ்வரி தனது சொந்த செலவில் சுஜிதாவிற்கு பட்டு சேலை மற்றும் சீர்வரிசை பொருட்கள் வாங்கிக் கொடுத்து
வெங்கடேசுடன் திருமணம் செய்து வைத்தார்.







