திருநெல்வேலியில் 20-க்கும் மேற்பட்ட நாய்களை விஷம் வைத்து கொன்ற மேலக்கருங்குளத்தை சேர்ந்த செல்வம் என்பவர் நியூஸ்7 தமிழ் செய்தி எதிரொலியால் கைது செய்யப்பட்டார்.
திருநெல்வேலி மேலப்பாளையம் அருகில் உள்ள மேலக்கருங்குளம் பகுதியில், விவசாய தோட்டங்கள் அதிகம் இருக்கின்றன. இப்பகுதியில் பாதுகாப்பு பணிக்காக நாய்கள் அதிகமாக வளர்க்கப்படுகிறது. இந்நிலையில், நேற்று நள்ளிரவு முதல் பல வீடுகளில் நாய்கள் காணவில்லை எனக் கூறப்படுகிறது.
இதையடுத்து, இன்று காலையில் மேலக்கருங்குளம் ஊர் முழுவதும் ஆங்காங்கே 20க்கும் மேற்பட்ட நாய்கள் இறந்து கிடத்தன. இதை கண்டு அதிர்ச்சியடைந்த ஊர் மக்கள் மேலப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
பல நாய்கள் நீர் நிலைகளில் இறந்து கிடப்பதால் விஷம் நீரில் கலந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. அதை மற்ற விலங்குகள் அருந்தும் முன் பாதுகாப்பு
நடவடிக்கைகளை எடுக்க வேண்டும், உயிரிழந்த நாய்களை போஸ் மார்டம் செய்து விஷம் வைத்த நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்த விவகாரம் குறித்து நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அடுத்து விஷம் வைத்து விலக்குகளை சித்தரவதை செய்து உயிரிழக்க செய்த நபர் மேலக்கருங்குளத்தை சேர்ந்த செல்வம் என்பவர் என தெரியவந்தது. இதனை அடுத்து அவரை கைது செய்த போலீசார், கொலை செய்யும் நோக்கில் மிரட்டல், விலங்குகளுக்கு விஷ வைத்து கொன்றது, உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.







