சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் இளையராஜாவின் பொன்விழா ஆண்டு பாராட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் அரை நூற்றாண்டு காலம் பலரது இதயத்தை ஆண்ட இசைஞானி இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த நிலையில், இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இளையராஜாவின் பாராட்டு விழா நிகழ்ச்சி வீடியோவை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், “இது ஒரு பொன்மாலைப் பொழுது என நேற்றைய மாலை ராஜாவின் ராகங்களோடு கரைந்து போனாலும் – உள்ளத்தில் உறைந்து நிற்கிறது! இசைஞானி தமிழ்நாட்டின் பெருமை! அவரைக் கொண்டாடுவது நம் கடமை! இவ்வாறு அதி தெரிவிக்கப்பட்டுள்ளது.







