தமிழக – கேரளா எல்லைப்பகுதியில் பசு மாட்டினை, சிறுத்தை புலி ஒன்று கொன்று இழுத்து சென்றுள்ள நிகழ்வு அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க கேரள வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம், தமிழக-கேரள எல்லை பகுதியான ஆரியங்காவுப் பகுதி உள்ள சோலைக்கிளி எஸ்டேட்டை சேர்ந்தவர் தங்கையா. இவர், அந்த பகுதியில் சொந்தமாக ஆடு, மாடுகளை வைத்து வளர்த்து வருகிறார். தற்போது மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தற்போது கடும் வறட்சி நிலவி வருவதால், சோலைக்கிளி எஸ்டேட் பகுதியில் அவ்வப்போது வனவிலங்குகள் ஊருக்குள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தி வந்தன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு தங்கையா வளர்த்து வந்த பசு மாடு
ஒன்றினை, புலி ஒன்று கடித்து இழுத்து சென்றுள்ளது. அதனை தொடர்ந்து, தங்கையா அளித்த புகாரின் அடிப்படையில் கேரள வனத்துறையினர், அந்த பகுதிகளில் கேமராக்களை வைத்து புலி நடமாட்டம் உள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்தனர். அப்பொழுது, அந்த பகுதியில் புலி நடமாட்டம் இருப்பதை வனத்துறையினர் உறுதி செய்தனர். இதையயடுத்து, அந்த பகுதியில் உள்ள பொதுமக்களை பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்
வழங்கினர்.
இந்த நிலையில், தங்கையா வளர்த்து வரும் மற்றொரு மாட்டினை, புலி ஒன்று கடித்து இழுத்து சென்றுள்ளது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், கேரள வனத்துறையினர், அந்த பகுதிக்கு வந்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு, அங்கு வசித்து வரும் பொது மக்கள் பாதுகாப்பாக இருக்கவும், அவர்கள் வளத்து வரும் வீட்டு விலங்குகளை பாதுகாப்பாக வளர்க்கவும் அறிவுறுத்தியுள்ளனர்.
- பி.ஜேம்ஸ் லிசா