இந்திய ரயில்வே துறையின் முதல் தனியார் ரெயில் தமிழகத்தின் கோவையிலிருந்து தனது முதல் சேவையை தொடங்குகிறது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட கால அட்டவணையில் கூறப்பட்டுள்ளதாவது:
இந்த ரயில் ஜூன் 14 அன்று கோவையிலிருந்து மகாராஷ்டிரா சாய்நகர் ஷீரடிக்கு முழுக்க முழுக்க தனியார் மூலம் இயக்கப்படுகிறது.
கோவையில் மாலை 6 மணிக்கு இந்த ரயில் புறப்படும். திருப்பூருக்கு 7 மணி ஈரோடு 8 மணி, சேலம் 9.15, (15.6.2022) அன்று ஜோலார்பேட்டை இரவு 00.10, எலகங்கா விடியற் காலை 5 மணிக்கும், தர்மாவரம் 6.20, மந்த்ராலயம் ரோடு 11.00 மணிக்கும், மாலை 4.00 மணிக்கு மந்த்ரா ரோட்டிலிருந்து புறப்பட்டு வாடி இரவு 7.15க்கும், (16.6.2022) அன்று காலை 7.25க்கு சாய்நகர் ஷீரடியை சென்றடையும்.
இதையும் படியுங்கள்: அடுத்த குடியரசுத் தலைவர் யார் ?
அதேபோல் 17.6.2022 அன்று காலை 7.25 க்கு சாய்நகர் ஷீரடியிலிருந்து புறப்பட்டு வாடி ரெயில் நிலையத்திற்கு மாலை 4.30 க்கும், தர்மாவரத்திற்கு இரவு 11.10க்கும், எலங்காவிற்கு 18.6.2022 காலை 2.10க்கும், ஜோலார்பேட்டைக்கு காலை 5.55க்கும், சேலம் 7.30க்கும், ஈரோடு 8.30க்கும், திருப்பூர் 10.25க்கும், கோவைக்கு நண்பகல் 12.00 மணிக்கு வந்து சேரும் என தெற்கு ரயில்வே தலைமை அலுவலகம் கால அட்டவணையை வெளியிட்டுள்ளது.
-மணிகண்டன்








