முக்கியச் செய்திகள் செய்திகள்

பிப்.8ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கும்: அண்ணா பல்கலைக்கழகம்

முதலாமாண்டு கல்லூரி மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள் வரும் 8-ம் தேதி முதல் தொடங்கும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

சென்னை அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்புக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்குவதற்கான தேதி வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, B.E., B.Tech., B.Arch., M.Arch. முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் வருகிற 8-ம் தேதி தொடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் மார்ச் 15-ம் தேதி தொடங்கும் என்றும், 3-ம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் ஏப்ரல் 5-ம் தேதி தொடங்கும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மேலும், M.E., M.Tech., MBA, MCA, M.Sc. முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் மார்ச் 8-ம் தேதி தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் உள்ள கல்லூரிகளில், ஏற்கனவே இறுதியாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெற்று வரும் நிலையில், எஞ்சிய பிரிவு மாணவர்களுக்கான வகுப்புகளும் வரும் 8-ம் தேதி தொடங்கும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.அதன்படி, சென்னை அண்ணா பல்கலைக்கழகம், அதன் வளாகக் கல்லூரிகள் மற்றும் உறுப்புக் கல்லூரிகளில் வகுப்புகள் எப்போது தொடங்கும் என்பதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள்-தமிழிசை செளந்தரராஜன் புகழாரம்

Web Editor

நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலி: பசுவதை- மதுரை ஆட்சியர் நேரில் ஆய்வு

Vandhana

கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றுவதில் எந்த மாற்று கருத்தும் இல்லை -திருநாவுக்கரசர் எம்.பி

EZHILARASAN D

Leave a Reply