எழுவர் விடுதலை விவகாரத்தில் குடியரசு தலைவருக்கே முடிவெடுக்கும் அதிகாரம் என மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
தண்டனையை நிறுத்தி வைக்க கோரி பேரறிவாளன் தொடர்ந்த வழக்கு, வரும் செவ்வாய்கிழமை உச்ச நீதிமன்றத்தில் விசாரணை வருகிறது. இந்நிலையில் இந்த வழக்கில் மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. அதில் ஏழு பேர் விடுதலை குறித்து ஆவணங்களை ஆய்வு செய்த ஆளுநர், குடியரசு தலைவருக்கே அதிகாரம் உள்ளது என முடிவு செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசுக்கு வந்துள்ள பரிந்துரை குறித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.







