வருங்காலங்களில் விவசாயிகளின் பிரச்னைக்கு காங்கிரஸ் கட்சியினர் இதேபோல் குரல் கொடுப்பார்கள் என விவசாயிகளுக்கு எழுதிய கடிதத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு, மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இந்த அறிவிப்பை வரவேற்ற காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, விவசாயிகளுக்கு ஹிந்தியில் கடிதம் எழுதியுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதில், போராட்டத்தில் உயிர்த்தியாகம் செய்த 700-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்குத் தலை வணங்குவதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்தப் போராட்டம் இன்னும் முடிவடையவில்லை என்றும், முதலாளிகளுக்காக விவசாயிகளை, அவர்கள் சொந்த மண்ணில் அடிமையாக்க மத்திய அரசு இனி ஒரு போதும் நினைக்கக்கூடாது எனத் தெரிவித்திருந்தார்.
மேலும் 2022-ஆம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். வருங்காலங்களிலும், விவசாயிகளின் பிரச்னைக்கு இதேபோல் காங்கிரஸ் கட்சியினர் குரல் கொடுப்பார்கள் என்பதை தாம் உறுதி அளிப்பதாகவும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.