முக சீரமைப்பு அறுவை சிகிச்சை முடிந்து சிகிச்சை பெற்று வந்த சிறுமி டானியாவை முதல்வர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
சென்னை ஆவடி அடுத்த வீராபுரம் பகுதியைச் சேர்ந்த சிறுமி டானியா முக சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். பிறகு தமிழக முதலமைச்சரின் நேரடி கண்காணிப்பில் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு கடந்த 23ஆம் தேதி முகச்சீரமைப்பு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சிறுமி டானியா ஐசியு வார்டில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்களின் நேரடி கண்காணிப்பில் இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று அவசர சிகிச்சை பிரிவில் உள்ள அறுவை சிகிச்சை அறைக்கு கொண்டு சொல்லப்பட்டு டானியாவை இரண்டு மணி நேரம் வரை மருத்துவர்கள் பரிசோதனை செய்து தற்போது சாதாரண வார்டுக்கு மாற்றி உள்ளனர்.
இந்நிலையில் நேற்று இரவு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் திடீரென மருத்துவமனைக்கு வருகை தந்து சிறுமி டானியாவை சந்தித்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். அதனைத் தொடர்ந்து முதலமைச்சர் டானியாவிடம் நீ ஒரு வாரத்திற்குள்ளாக பள்ளிக்கு சென்று உன்னை கிண்டல் செய்தவர்கள் மத்தியில் படிக்க வேண்டும் என்றும், டானியாவின் பெற்றோரிடம் இனிமேல் நீங்கள் எதற்கும் கவலைப்படாதீர்கள் நாங்கள் இருக்கிறோம் என்று உற்சாகப்படுத்தினார். மேலும், மருத்துவரிடம் சிறுமிக்கு மேற்கொண்ட மற்றும் மேற்கொள்ளப்பட உள்ள சிகிச்சை பற்றி கேட்டறிந்தார்.