சிறுமி தான்யாவிற்கு முகச்சிதைவு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்து சிறுமி தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர் கண்காணிப்பில் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி வீராபுரம் ஶ்ரீ வாரி நகர் பகுதியை சேர்ந்தவர் ஸ்டீபன்ராஜ் – சௌபாக்யா தம்பதியினர். இவர்களுக்கு கடந்த 2012ம் ஆண்டு திருமணமாகி ஒரு மகள், மகன் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர்களின் மூத்த மகள் தான்யா. ஒன்பது வயதாகிறது. டானியா வீராபுரம் அரசினர் பள்ளியில் நான்காம் வகுப்பு பயின்று வருகிறார்.
சிறுமி தான்யா மிக அரிய வகை முகசிதைவு நோயால் பாதிக்கப்பட்டு ஒரு பக்க கண்ணம் முழுவதும் சிதைந்த நிலையில் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் பள்ளி படிப்பை தொடர முடியாமல் அவதி அடைவது குறித்து செய்தி ஊடகங்களில் வெளியிடபட்டது. இதனை அறிந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவருக்கு தேவையான அனைத்து உதவிகளும் தமிழகஅரசு மூலம் செய்து தரப்படும் என கூறியிருந்தார்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஶ்ரீபெரும்புதூர் அருகே உள்ள தண்டலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற்று வந்தார். மேலும் தினமும் அந்த சிறுமியை தான்யாவை தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க தமிழக பால்வளத் துறை அமைச்சர் நாசர் தினமும் மருத்துவமனைக்கு வந்து அவரின் நலம் விசாரித்து வருகிறார்.
அது மட்டும் இன்றி இன்று சிறுமி தான்யாவிற்க்கு 10 பேர் கொண்ட மருத்துவ குழுவினரால் அறுவை சிகிச்சை இன்று 8மணிக்கு நடைபெற உள்ளதாகவும், பேரிரொம்போக் என்னும் இந்த நோய் உலகத்திலேயே இரண்டரை லட்சம் பேரில் ஒருவருக்கு தான் சிறிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதுவும் வயதில் பெரியவர்களுக்கு தான் பாதிப்பு வரும் ஏற்பட்டுள்ளதாகவும் ஆனால் சிறுமி தான்யா முகச்சிதைவால் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளதால் சுமார் 8 மணிநேரம் அறுவை சிகிச்சை நடைபெறவுள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர்.
இதையடுத்து இன்று காலை சிறுமி தான்யாவிற்கு அறுவை சிகிச்சை நடைபெற்றது. மேலும் அறுவை சிகிச்சைக்கு முன்பு பால்வளத்துறை அமைச்சர் நாசர் நேரில் வந்து டானியாவுக்கு தைரியம் ஊட்டி அறுவை சிகிச்சை அறைக்கு அனுப்பி வைத்தார். அறுவை சிகிச்சை முடிந்த பிறகு சிறுமியின் தாயார் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தொலைபேசியில் கண்ணீர் மல்க நீங்கள் தான் என் கண்கண்ட தெய்வம் என்று நன்றி தெரிவித்தார்.
இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சிறுமி தான்யாவிற்கு முகசிதைவுக்கான அறுவை சிகிச்சை வெற்றிக்கரமாக முடிந்தது. அறுவை சிகிச்சை முடிந்து சிறுமி தீவிர சிக்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டு மருத்துவர்களின் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.







