கூட்டணி குறித்து அடுத்த வாரம் முடிவு எடுக்கப்படும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
வன்னியர் உள்ஒதுக்கீடு குறித்த சந்தேகங்களும் அதற்கான விளக்கங்களும் என்ற தலைப்பில் இணையவழி கருத்தரங்கம் இன்று நடைபெற்றது. அதில் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், இடஒதுக்கீடு தொடர்பாக முதலமைச்சருக்கு எழுதிய கடிதங்களுக்கு இதுவரை பதில் வரவில்லை என தெரிவித்தார். பொங்கலுக்கு பிறகு வருகிறேன் என கூறிய அமைச்சர்கள், மீண்டும் பேச வரவில்லை என தெரிவித்த ராமதாஸ், தேர்தலுக்குப் பிறகு கொடுப்பதை யார் நம்புவார்கள்? யார் ஏற்றுக்கொள்வார்கள்? என கேள்வி எழுப்பினார்.மேலும், பாமக நிர்வாகக் குழு வரும் 31ஆம் தேதி கூட உள்ளதாகவும், அதற்குள் உள் ஒதுக்கீடு தொடர்பாக முடிவு எட்டப்படவில்லையென்றால், அதுகுறித்து நிர்வாகக்குழு கூட்டத்தில் விவாதிக்கப்படும் என ராமதாஸ் தெரிவித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பிப்ரவரி முதல் வாரத்தில் பொதுக்குழுவை கூட்டி, கூட்டணி தொடர்பாக முடிவெடுக்க உள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.