வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபை, பழனி முருகன் கோயில், நெல்லை முருகன் கோயில் உள்ளிட்ட கோயில்களில் தைப்பூச விழா நடைபெற்று வருகிறது.
கடலூர் மாவட்டம் வடலூரில் அருட்பிரகாச வள்ளலார் நிறுவிய சத்தியஞான சபை உள்ளது. இங்கு வருடா வருடம் தைப்பூசத்தன்று ஜோதி தரிசனம் வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு 151-வது ஜோதி தரிசன விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த தைப்பூச விழாவின் முதல் ஜோதி காலை 6 மணிக்கு தொடங்கியது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதை முன்னிட்டு ஏழு திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கொரனோ தோற்று பரவல் காரணமாக 18 ம் தேதி வரை வழிபாட்டுத் தலங்களில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என தமிழக அரசின் கட்டுப்பாடுகளால் இந்த ஆண்டு பக்தர்களுக்கு நேரடி ஜோதி தரிசனம் காண்பதற்கு அனுமதி இல்லை. எனவே, செய்தி தொலைக்காட்சிகள் மற்றும் இணையதள வாயிலாக நேரடி ஒளிபரப்பு மூலம் ஜோதி தரிசனம் காண்பதற்கு கடலூர் மாவட்ட நிர்வாகம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
திருக்கல்யாண வைபவத்தை தொடர்ந்து நான்குரத வீதிகளில் வழக்கமாக நடைபெறும் வெள்ளித்தேரோட்டம் கொரோனா பரவல் காரணமாக ரத்து செய்யப்பட்டு, கோவில் வளாகத்திற்குள்ளேயே நடைபெற்றது. இதேபோல இன்று மாலை வழக்கமாக நடைபெறும் தைப்பூசத் தேரோட்டமும் ரத்து செய்யப்பட்டுள்ளதால், அந்நிகழ்வு சிறிய மரத்தேரில் கோவில் வளாகத்திற்குள்ளேயே நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதன்முதலாக பக்தர்கள் இன்றி நடைபெறும் தைப்பூசத் திருவிழாவை பக்தர்கள் காணும்படி திருக்கோவில் நிர்வாகம் சார்பில் இணையதளம் மற்றும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதேபோல், திருநெல்வேலி மாவட்டம் உவரி சுயம்புலிங்க சுவாமி கோயில் தைப்பூசத் தேரோட்டம் கட்டுப்பாடுகளுடன் நடைபெற்று வருகிறது. 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இந்த தேரோட்டம் கருதப்படுகிறது. மேலும், இரண்டு தவணை தடுப்பூசி மற்றும் முக கவசம் அணிந்தவர்கள் மட்டுமே தேரோட்டத்தில் பங்கேற்க அனுமதி.