தாய்லாந்து பிரதமராக கடந்த 9 ஆண்டுகளாக பதவி வகித்து வரும் பிரயுத் சான்-ஓச்சா, அரசியலில் இருந்து முழுமையாக விலகுவதாக அறிவித்துள்ளார்.
கடந்த 2014-ஆம் ஆண்டில் ராணுவ தலைமைத் தளபதியாக இருந்த பிரயுத் சான்-ஓச்சா, அப்போது ஏற்பட்ட அரசியல் குழப்பம் காரணமாக ஆட்சியைக் கைப்பற்றினார். பின்னர் 2019-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் அவரது யுடிஎன் கட்சி 23.34% வாக்குகளைப் பெற்று முதலிடம் பிடித்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் கடந்த மே மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் அவரின் தலைமையிலான யுடிஎன் கட்சி படுதோல்வியடைந்தது. 2019-ம் ஆண்டில் முதலிடம் பிடித்த அவரது கட்சி இந்த தேர்தலில் 5-வது இடத்துக்கு தள்ளப்பட்டது. இதனால் கடந்த 9 ஆண்டுகளாக பிரதமர் பதவி வகித்த பிரயுத் சான்-ஓச்சா அரசியலில் இருந்து முழுமையாக தான் விலகுவதாக அறிவித்துள்ளார்.
இது குறித்து பிரயுத் சான்-ஓச்சா தனது முகநூல் பக்கத்தில், ”யுடிஎன் கட்சித் தலைமையிலிருந்து விலகுவதன் மூலம், அரசியலில் இருந்து முழு ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன். கட்சியின் பிற தலைவர்களும், நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களும் கட்சிக் கொள்கையை முன்னெடுத்துச் செல்லவேண்டும்” இவ்வாறு பதிவிட்டுள்ளார்.