ஜம்மு-காஷ்மீரில் அடுத்தடுத்த தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஒரு குழந்தை உட்பட 5 பேர் உயிரிழந்தனர்.
ஜம்மு-காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்துக்குட்பட்ட டாங்கிரி கிராமத்தில் பயங்கர ஆயுதங்களுடன் நுழைந்த 2 தீவிரவாதிகள், அங்கிருந்த 3 வீடுகளில் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் 4 பேர் உயிரிழந்த நிலையில், தப்பியோடிய தீவிரவாதிகளைத் தேடும் பணியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதையடுத்து, இந்த தீவிரவாத தாக்குதலைக் கண்டித்தும், விரைவாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் ஜம்மு-காஷ்மீரில் சில அமைப்புகள் முழு அடைப்பிற்கு அழைப்பு விடுத்துள்ளன. தொடர்ந்து, இந்த தாக்குதலில் படுகாயமடைந்தோர் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைக்கு முன்பாக பொதுமக்கள் கூடி, பாகிஸ்தானுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். அதேபோல் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்காவுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர்.
இந்நிலையில், தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய டாங்கிரி கிராமத்தில், அதிகாலை கண்ணி வெடிகுண்டு வெடித்ததில் ஒரு குழந்தை உயிரிழந்தது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்தை சுற்றிவளைத்து பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட சோதனையில், மற்றொரு கண்ணி வெடிகுண்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கண்ணி வெடிகுண்டுகளை அழிக்கும் பணியில் வெடிகுண்டு நிபுணர்கள் ஈடுபட்டுள்ள நிலையில், அப்பகுதி முழுவதும் பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.