தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தல்: டெல்லியில் காங்கிரஸ் ஆலோசனை!

டெல்லி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் தெலங்கானா காங்கிரஸ் தலைவர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆண்டு இறுதியில் தெலங்கானா மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. தொடர்ந்து கர்நாடகா, இமாச்சல பிரதேசம் என இருவேறு…

டெல்லி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் தெலங்கானா காங்கிரஸ் தலைவர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆண்டு இறுதியில் தெலங்கானா மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. தொடர்ந்து கர்நாடகா, இமாச்சல பிரதேசம் என இருவேறு மாநிலங்களை காங்கிரஸ் கைப்பற்றிய நிலையில் தற்போது அதன் பார்வை தெலங்கானா மீது திரும்பி உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தெலங்கானா காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர் மாணிக் ராவ் தாக்கரேவும் கலந்து கொண்டார்.

முன்னதாக தெலங்கானாவில் ஆட்சி செய்துவரும் சந்திரசேகர் ராவின் பாரத ராஷ்ட்ரிய சமிதி கட்சியை விட்டு வெளியேறிய முன்னாள் எம்.பி பொங்குலேடி ஸ்ரீனிவாஸ் ரெட்டி, முன்னாள் அமைச்சர் ஜூபல்லி கிருஷ்ணராவ் மற்றும் முன்னாள் எம்எல்ஏக்கள் உள்ளிட்ட 12 பேர் நேற்று காங்கிரஸில் இணைந்தனர்.

இதனை தொடர்ந்து இன்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கர்நாடகத்தைத் தொடர்ந்து தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி வியூகம் குறித்து காங்கிரஸ் ஆலோசிப்பதாக கூறப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.