உதகையில் கடந்த மூன்று நாட்களுக்கும் மேலாக தொடரும் கடும் உறைப் பனிப்பொழிவால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு நிலவும் கடும் பனிப்பொழிவு காரணமாக அவலாஞ்சியில் குறைந்தபட்ச வெப்பநிலை ஜீரோ டிகிரியாகவும், உதகையில் குறைந்தபட்ச வெப்பநிலை 2 டிகிரியாகவும் பதிவாகியுள்ளது.
மலைகளின் அரசி என்றழைக்கப்படும் உதகையில் நவம்பர் முதல் பிப்ரவரி மாதம் இறுதி வரை பனிக்காலம் இருக்கும். குறிப்பாக நவம்பர் மாதம் துவக்கத்தில் நீர் பனி ஆரம்பித்து படிபடியாக உறைபனி பொழிவு காணப்படும், ஆனால் கடந்த ஆண்டு தொடர் மழை காரணாத்தால் உறை பனிபொழிவு தாமதமாக ஜனவரி மாதத்தில் துவங்கியுள்ளது.
இதனால் பகல் நேரங்களில் நல்ல வெயிலும், மாலை மற்றும் இரவு நேரங்களில் கடுங்குளிரும் நிலவுகிறது. இந்நிலையில் உதகை மற்றும் அதன் சுற்றி உள்ள பகுதிகளில் அதிகாலை நேரங்களில் கடும் உறைபனி பொழிவு காணப்பட்டது. உறைபனி பொழிவு காரணமாக உதகை மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் இருக்கும் புல்வெளிகள் மீது உறைபனி பொழிவு அரை அங்குலத்திற்கு காணப்பட்டது. குறிப்பாக உதகை நகர், தலைகுந்தா , HPF, காந்தள் , பிங்கர்போஸ்ட் உள்ளிட்ட பகுதிகளில் உறைபனி புள்வெளிகளிலும், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களின் மீது படிந்திருந்தது.
இதனால் உதகையில் கடும் குளிர் நிலவுகிறது. தற்போது குளிரின் தாக்கம் அதிகரிக்க தொடங்கி உள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கபட்டுள்ளது. கடுங்குளிர் காரணமாக அவலாஞ்சி பகுதியில் O டிகிரி செல்சியஸ் குறைவான வெப்பநிலையும், உதகை சுற்றுவட்டார பகுதிகளில் 5வது நாளாக o டிகிரி
செல்சியஸ்சும், உதகை நகரப்பகுதியில் குறைந்தபட்ச வெப்பநிலையாக 2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. சம வெளி பகுதிகள் மினி காஷ்மீரை போல் காட்சியளிக்கின்றது.









