முக்கியச் செய்திகள் தமிழகம்

4 நாட்களுக்கு மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்

தமிழ்நாட்டின் அநேக இடங்களில் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், தென்மேற்கு பருவக் காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக இன்றும் நாளையும் தென் மாவட்டங்கள் மற்றும் ஓரிரு உள் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும். நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல் திருப்பூர், தென்காசி மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக வரும் 18ஆம் தேதி உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான முதல் கன மழை பெய்யும், தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்றும், வரும் 20ஆம் தேதி வரை மழை நீடிக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ரயிலில் சுகாதாரமற்ற முறையில் உணவு விற்பனை?

G SaravanaKumar

ஆதார் எண் இணைத்தால் மட்டுமே 100 யூனிட் இலவசம் என்பது தவறான செய்தி – அமைச்சர் செந்தில் பாலாஜி

EZHILARASAN D

சமூக வலைதளத்தில் வைரலாகும் தனுஷின் தந்தையர் தின வாழ்த்து!

G SaravanaKumar