தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 1,785 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை உச்சத்தில் இருந்த கொரோனா பாதிப்பு, அதன்பிறகு படிப்படியாக குறையத் தொடங்கியது. தற்போது, மற்ற மாநிலங்களை விட குறைந்த அளவிலேயே பதிவாகி வருகிறது. கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளும் அதிகளவு நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் மக்கள் நல்வாழ்வுத் துறை இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 1,785 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 25,50,282 ஆக உயர்ந்துள்ளது. மாநிலம் முழுவதும் இன்று 26 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்பு 33,937 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் சிகிச்சை பெற்றுவந்த 2,361 பேர் டிஸ்சார்ஜ் ஆன நிலையில், நலம் பெற்றவர்கள் எண்ணிக்கை 24,93,583 ஆக அதிகரித்துள்ளது. தற்போதைய சூழலில் தமிழ்நாடு முழுவதும் 22,762 பேர் தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மாவட்டங்களைப் பொறுத்தவரை கோவையில் 164, ஈரோட்டில் 127, சென்னையில் 122, சேலத்தில் 102, தஞ்சையில் 103 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களில் 100க்கு கீழாகவே பாதிப்பு பதிவாகியுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.