தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1,467 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு முழுவதும் ஒரே நாளில், ஒரு லட்சத்து 48 ஆயிரத்து 229 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 1,467 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது. கொரோனாவால் இதுவரை 26 லட்சத்து 69 ஆயிரத்து 962 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்றில் இருந்து ஒரே நாளில் ஆயிரத்து 559 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 26 லட்சத்து 17 ஆயிரத்து 432 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.
அதே நேரத்தில், பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்தவர்களில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 35 ஆயிரத்து 666 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் புதிதாக 181 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 189 பேர், கடந்த 24 மணி நேரத்தில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், கோவையில் 155 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் 103 பேருக்கு புதிதாகத் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.







