தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1,597 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு முழு வதும் ஒரே நாளில், ஒரு லட்சத்து 53 ஆயிரத்து 288 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற் கொள்ளப்பட்டது. இதில் 1,597 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கொரோனாவால் இதுவரை 26 லட்சத்து 65 ஆயிரத்து 386 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற் றில் இருந்து ஒரே நாளில் ஆயிரத்து 623 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 26 லட்சத்து 12 ஆயிரத்து 684 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.
அதே நேரத்தில், பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்தவர்களில் 25 பேர் உயிரிழந்துள் ளனர். இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 35 ஆயிரத்து 603 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் புதிதாக 190 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 208 பேர், கடந்த 24 மணி நேரத்தில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
கோவையில் 170 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் 111 பேருக் கும் ஈரோட்டில் 102 பேருக்கும் தஞ்சாவூரில் 107 பேருக்கும் புதிதாகத் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.