உலகின் தலைசிறந்த 20 பெண் ஆளுமைகளில் ஒருவராக தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜனுக்கு வழங்கப்பட்டுள்ளது.
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு அமெரிக்கா எம்.பி டேனி கே. டேவிஸ் தலைமையில் செயல்பட்டு வரும் ‘Multi Ethnic Advisory Task Force’ என்ற அமைப்பின் சார்பில் 9-ம் ஆண்டு விருது வழங்கும் விழா அமெரிக்காவில் நேற்று நடைபெற்றது.
இவ்விருது நிகழ்வில் தமிழிசை சௌந்தரராஜன் காணொலி காட்சி மூலம் புதுச்சேரியில் இருந்து கலந்துகொண்டார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பெண்கள் உரிமை, பாலின சமத்துவம், பெண்களுக்கு அதிகாரமளித்தல் ஆகியவற்றை வலியுறுத்தி செயல்பட்டதற்காக தமிழிசை சௌந்தரராஜனுக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. தமிழிசையுடன் சேர்ந்து அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் மற்றும் உலகின் தலைசிறந்த பெண்களாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களும் இவ்விருதை பெற்றுக்கொண்டனர்.