நிதி நிலை அறிக்கைக்காக வரும் 13 ஆம் தேதி கூடும் சட்டமன்றப் பேரவை கூடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சபாநாயகர் அப்பாவு தலைமையில் தலைமைச்செயலகத்தில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில், சட்டமன்றப் பேரவை கூட்டத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இதில் பேரவை முன்னவர் துரைமுருகன், காங் செல்வப்பெருந்தகை, பாஜக நயினார் நாகேந்திரன், பாமக கோ.க. மணி , இந்திய கம்யூ தளி ராமச்சந்திரன், மார்க்சிஸ்ட் நாகை மாலி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனையடுத்து வரும் 13 ஆம் தேதி முதல் செப்டம்பர் 21 வரை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 13ம் தேதி காகிதமில்லா நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும், அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் பங்கேற்காதது அதிமுகவினரின் விருப்பம் என்றும் சபாநயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.