கோவை அணியினர் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 193 ரன்களை குவித்தனர். சச்சின் 46 பந்துகளில் 70 ரன்களும், முகேஷ் 27 பந்தில் 44 ரன்களும், சுரேஷ் குமார் 26 ரன்களும் குவித்தனர்.
194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திண்டுக்கல் அணி களம் இறங்கியது. ஆனால் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்ததால் அந்த அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 163 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. அதிக பட்சமாக சரத்குமார் 26 பந்துகளில் 62 ரன்கள் சேர்த்தார்.
பூபதி 25, பாபா இந்திரஷித் 21 ரன்கள் சேர்த்தனர்- இதையடுத்து 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நடப்பு சாம்பியன் அணி கோவை அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.







