ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு தமிழக அரசு பாதுகாப்பு வழங்க வேண்டும்-பாஜக மாநில துணைத் தலைவர்

ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு தமிழக அரசு பாதுகாப்பு வழங்க வேண்டும் தமிழக பாஜக மாநில துணைத் தலைவர் வி.பி.துரைசாமி தெரிவித்தார். நாமக்கல்லில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: சட்டம்-ஒழுங்கு பிரச்னையை காரணம் காட்டி நீதிமன்ற…

ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு தமிழக அரசு பாதுகாப்பு வழங்க வேண்டும் தமிழக பாஜக மாநில துணைத் தலைவர் வி.பி.துரைசாமி தெரிவித்தார்.

நாமக்கல்லில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

சட்டம்-ஒழுங்கு பிரச்னையை காரணம் காட்டி நீதிமன்ற உத்தரவை மீறி ஆர்எஸ்எஸ் பேரணிக்கு தமிழக அரசு அனுமதி மறுத்தது. உச்ச நீதிமன்றம் உத்தரவு பிற்பித்தால் அதனை நிறைவேற்ற வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது.

நீதிமன்றம் பேரணி நடத்த உத்தரவு பிறப்பித்த நிலையில் அடுத்த நாள் அரசு தடை விதித்ததை சட்டம் தெரிந்தவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.  அது சட்டத்திற்கு முரணானது. ஆர்எஸ்எஸ் ஊர்வலத்தை நவம்பர் 6ந் தேதி நடத்திக் கொள்ளலாம், அரசு சட்டப்படி பாதுகாப்பு வழங்க வேண்டும் என உயர் நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.

திமுகவின் அணிகளாக விளங்குகின்ற காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக  ஆகிய கட்சிகள் மத நல்லிணக்க மனித சங்கலி நடத்துவதாக தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் மத நல்லிணக்கம் பேணுவதற்காக திமுக கூட்டணிக் கட்சிகள் சொல்வதை பார்த்தால் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு கெட்டுப்போய் விட்டதாக கூட்டணி கட்சியினரே ஒத்துக் கொள்கிறார்கள்.

தமிழகத்தில் மத நல்லிணக்கம் நன்றாக உள்ளது என்பதில் சந்தேகமே இல்லை. இஸ்லாமிய, கிறிஸ்தவ பெருமக்கள் பாஜகவின் அணுகு முறையை ஏற்றுக் கொண்டு பாஜகவில் உறுப்பினராக சேர்கிறார்கள்.

தேசிய புலனாய்வுத் துறை 13 மாநிலங்களில் பலரை கைது செய்த நிலையில் மத நல்லிணக்கம் கெட்டதாக திமுகவில் உள்ள அணிகளில் ( கூட்டணி கட்சிகள்) ஒன்றாக விளங்கும் கூட்டணிகள் சேர்ந்து கொண்டு எண்ணங்கள், செயல்களை திமுக அரசின் தூண்டுதலின் பெயரில் இந்த மனித சங்கிலியை நடத்துகின்றனர்.

திமுக எப்போது எல்லாம் ஆட்சி அமைகிறதோ அப்போது எல்லாம் குண்டு கலாசாரம் ஏற்படும்.  திமுகவில் இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு திமுக துணைப் பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்தேன்.

திமுக கோட்பாடு, கொள்கை கோட்பாட்டில் இருந்து விலகி போனதால் அதிலிருந்து விலகி பாஜகவின் சிந்தாந்தம், சாதனைகளை ஏற்றுக்கொண்டு சேர்ந்து விட்டேன். தன்னை கேலி, கிண்டல் செய்தார்கள், மனம் புன்படும்படி கமாண்ட் செய்தார்கள்.

இரண்டரை ஆண்டு காலத்தில் இரண்டாவது பெரிய பொறுப்பில் இருந்து சுப்புலட்சுமி ஜெகதீசன் விலகியுள்ளார். திமுக தொண்டர்களுக்கும், திமுக தலைமைக்கும் இடைவெளி நிரம்ப ஏற்பட்டு விட்டது. வரும் 9 ம் தேதி திமுக தலைவர் தேர்தலுக்கு பிறகு பலர் விலக வாய்ப்புள்ளது.

வரும் 2024 ம் ஆண்டு எம்.எல்.ஏ, எம்.பி தேர்தல் ஒன்றாக வந்தால் நாங்கள் பொறுப்பல்ல என பாஜக தலைவர் அண்ணாமலை கோவையில் பேசியுள்ளார். தேர்தல் வருவதற்கு வாய்ப்பு அதிகமாக உள்ளது. அப்படி வந்தால் தமிழகத்தில் பாஜக அண்ணாமலை தலைமையில் ஆட்சியும், மத்தியில் மூன்றாவது முறையாக மோடி தலைமையில் பாஜக ஆட்சியும் அமையும்.

சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் கண்ணியமாக பேச வேண்டும் என முதல்வர் நினைக்கின்றார். முதல்வரின் கட்டளையை ( எம்.எல்.ஏ, அமைச்சர்) யாரும் ஏற்றுக் கொள்வதில்லை, பயப்படுவதில்லை. விநாயகர் சதுர்த்தி, தீபாவளி பண்டிகைகளுக்கு முதல்வர் வாழ்த்து சொன்னால் நாங்கள் இந்து மதத்திற்கு எதிரான கட்சி திமுக இல்லை என்பதை ஏற்றுக் கொள்கிறோம் என்றார் துரைசாமி.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.