மாற்றுத்திறனாளி மாணவர்களிடம் கல்வி கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை – தமிழ்நாடு அரசு எச்சரிக்கை!!

மாற்றுத்திறனாளி மாணவர்களிடம் கல்வி கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு  அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் அரசு மற்றும் அரசு உதவி பெறும், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில்…

மாற்றுத்திறனாளி மாணவர்களிடம் கல்வி கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு  அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் அரசு மற்றும் அரசு உதவி பெறும், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்விக்கட்டணம் செலுத்துவதில் இருந்து தமிழ்நாடு அரசு விலக்கு அளித்துள்ளது. எனினும் மாற்றுத்திறனாளி மாணவர்களிடம் கல்விக்கட்டணம் வசூலிக்கப்படுவதாக தொடர்ந்து புகார் எழுந்து வருகிறது.

இந்நிலையில் மாற்றுத்திறனாளி மாணவர்களிடம் கல்விக் கட்டணம் வசூலிக்கும் கல்லூரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதையும் படியுங்கள் : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை யாருக்கு?? இந்தியா – ஆஸ்திரேலியா பலப்பரீட்சை!!

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு விடுத்துள்ள அரசாணையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்வி கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும், அதனை மீறி கல்வி கட்டணம் வசூலித்தால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.