தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தமிழனே இல்லை அவர் பதவி விலக வேண்டும் என பாஜக மூத்த நிர்வாகி எச் ராஜா கடுமையாக விமர்சித்துள்ளார்.
தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் தேர்தல் அறிக்கையில் கூறியபடி பெட்ரோல், டீசல் விலையை குறைக்காத தமிழக அரசை கண்டிக்கும் வகையில் கோட்டையை நோக்கி பேரணி செல்லும் ஆர்ப்பாட்டம் இன்று சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் நடைபெற்றது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் தேர்தல் வாக்குறுதிப்படி பெட்ரோல் டீசல் விலையை தமிழக அரசு உடனடியாக குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தி கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டது.
கோட்டை நோக்கி பேரணி செல்லும் ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் நியூஸ்7 தமிழுக்கு எச்.ராஜா பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், மக்கள் உணர்வுகளை கொட்டி போராட்டத்திற்கு அவர்களாக வந்துள்ளார்கள். திராவிட மாடல் அரசு எவ்வளவு மோசடி அரசு என்பதை மக்கள் உணர்த்துள்ளார்கள் என கூறினார்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வந்திருக்கிற மக்கள் வெள்ளம், கூட்டிய கூட்டம் அல்ல கூடிய கூட்டம் இது. தமிழ்நாடு நிதியமச்சரை முதலில் பதவி நீக்க வேண்டும், நிதியமைச்சர் தமிழனே இல்லை. அவருக்கே தமிழ் வரவில்லை என்றால் பின்னர் மார்க்கரேட்டிற்கு எப்படி தமிழ் வரும். இவர்கள் என்னை தமிழன் இல்லை பிகாரி என்கிறார்கள் என்றார்.