பிரதமர் வருகையையொட்டி பாதுகாப்பு அம்சங்கள் குறித்து தமிழ்நாடு டிஜிபி ஆய்வு!

சென்னைக்கு பிரதமர் பிரதமர் நரேந்திர மோடி நாளை வரும் நிலையில், பாதுகாப்பு அம்சங்கள் குறித்து தமிழக டிஜிபி சைலேந்திர பாபு ஆய்வு மேற்கொண்டார். சென்னை விமான நிலையத்தில், புதிய முனையக் கட்டிடத்தை திறந்து வைக்க…

சென்னைக்கு பிரதமர் பிரதமர் நரேந்திர மோடி நாளை வரும் நிலையில், பாதுகாப்பு அம்சங்கள் குறித்து தமிழக டிஜிபி சைலேந்திர பாபு ஆய்வு மேற்கொண்டார்.

சென்னை விமான நிலையத்தில், புதிய முனையக் கட்டிடத்தை திறந்து வைக்க
பிரதமர் மோடி நாளை சென்னைக்கு வருகிறார். அதேபோல், சென்னை –
கோயம்புத்தூர் இடையே வந்தே பாரத் ரயில் சேவை, தாம்பரம்-செங்கோட்டை
இடையே வாரம் 3 முறை விரைவு ரயில் சேவை ஆகியவற்றையும் பிரதமர் தொடங்கி
வைக்கிறார். இதேபோல , திருத்துறைப்பூண்டி-அகஸ்தியம்பள்ளி அகலப்பாதையை
துவக்கி வைக்க உள்ளார்.

மேலும், பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு, சென்னை சென்ட்ரல் ரயில்
நிலையத்தில் பாதுகாப்பு மற்றும் நிகழ்ச்சி ஏற்பாடுகள் தொடர்பாக, ரயில்வே
அதிகாரிகள், ஆர்பிஎஃப் அதிகாரிகள் மற்றும் தமிழக டிஜிபி ஆய்வு மேற்கொண்டனர்.
அதுமட்டும இன்றி, சென்ட்ரல் ரயில் நிலையத்தின் 10, 11-வது நடைமேடைகளில்
பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டனர்.

மேலும், கூடுதல் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்துவது, அருகில் உள்ள
கட்டிடத்தில் போலீஸார் பாதுகாப்பு, 11-வது நடைமேடையில் நிகழ்ச்சி நடத்துவது
ஆகியவை தொடர்பாக அதிகாரிகள் ஆய்வு செய்தனர். பிரதமர் மோடி வருவதையொட்டி
நிகழ்ச்சிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து வருவதாக ரயில்வே போலீஸார்
தெரிவித்தனர்.

—கு.பாலமுருகன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.