தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் – அக்.31ல் நடைபெறும் என அறிவிப்பு.!

தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம்  அக்டோபர் 31ல் நடைபெறும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.  இதுகுறித்து தமிழ்நாடு அரசின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது.. ” தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் வருகிற அக்டோபர் 31 ஆம்…

தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம்  அக்டோபர் 31ல் நடைபெறும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து தமிழ்நாடு அரசின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது..

” தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் வருகிற அக்டோபர் 31 ஆம் தேதி நடைபெற உள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வருகிற செவ்வாய்கிழமை மாலை 6.30 மணி அளவில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.

அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்படும் விஷயங்கள் குறித்த குறிப்புகள் அமைச்சர்களுக்கு தனித்தனியே அனுப்பி வைக்கப்படும். மேலும் இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் ஆளுநரிடம் நிலுவையில் உள்ள சட்ட மசோதாக்கள், புதிய திட்டங்களுக்கு அனுமதி வழங்குவது குறித்து  ஆலோசிக்கப்படலாம் என்றும் முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.