சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகள்: பிரபல நடிகை போலீசில் புகார்

சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகள் வெளியிடுவதாகக் கூறி நடிகை ஸ்வரா பாஸ்கர் போலீசில் புகார் செய்துள்ளார். பிரபல இந்தி நடிகை ஸ்வரா பாஸ்கர். இவர், தனு வெட்ஸ் மனு, சில்லர் பார்ட்டி, தனுஷ் நடித்த…

சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகள் வெளியிடுவதாகக் கூறி நடிகை ஸ்வரா பாஸ்கர் போலீசில் புகார் செய்துள்ளார்.

பிரபல இந்தி நடிகை ஸ்வரா பாஸ்கர். இவர், தனு வெட்ஸ் மனு, சில்லர் பார்ட்டி, தனுஷ் நடித்த ரான்ஜ்னா, தனு வெட்ஸ் மனு ரிட்டர்ன்ஸ் உட்பட பல படங்களில் நடித்துள்ளார். இவர் சமீபத்தில் தனக்கு பாலியல் வன்கொடுமை மிரட்டல்கள் வருவதாக புகார் கூறியிருந்தார். அது பரபரப்பாகி இருந்தது. இந்நிலையில் இப்போது தன்னைப் பற்றி சமூக வலைதளங் களில் ஆட்சேபனைக்குரிய கருத்துகளை பரப்பி வருவதாக, டெல்லி வசந்த் கஞ்ச் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

அதில், தான் நடித்த பழைய படம் ஒன்றின் காட்சியை மையமாக வைத்து ட்விட்டரிலும் யூடியூப்களிலும் தன்னை பற்றி தவறான கருத்துகளை பரப்பி வருவதாக புகார் அளித்துள் ளார். இதுபற்றி வழக்குப் பதிவு செய்துள்ள டெல்லி போலீசார், ஸ்வாரா பாஸ்கர் பற்றிய அவதூறு கருத்துகளை வெளியிட்டவர்களின் டிவிட்டர் கணக்குகள் குறித்து, ட்விட்டர் நிறுவனத்திடம் விசாரிக்க உள்ளனர்.

நடிகை ஸ்வரா பாஸ்கர், போதைப் பொருள் வழக்கில் ஷாருக் மகன் கைது செய்யப் பட்டதை அடுத்து அது தொடர்பான கருத்துகளை கடந்த சில நாட்களாக, சமூக வலை தளங்களில் பகிர்ந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.