புதுச்சேரியில் திடீரென கடல் சீற்றம் ஏற்பட்டதால், கடற்கரை ஓரம் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இடங்களில் கடல் நீர் புகுந்தது.
புதுச்சேரி காலாப்பட்டு சட்டமன்ற தொகுதியில் உள்ள மீனவ கிராமங்களில் 3000-க்கும் மேற்பட்ட மீனவ குடும்பத்தினர் மீன்பிடி தொழில் செய்து வாழ்ந்து வருகின்றனர்.
இப்பகுதியில் திடீரென கடல் சீற்றம் ஏற்பட்டு, கரை வரை கடல்நீர் புகுந்ததால் படகுகள் இழுத்து செல்லும் நிலை ஏற்பட்டது. இதனால் அப்பகுதி மீனவர்கள் அதிர்ச்சியடைந்து படகுகளை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றும் பணிகளில் ஈடுபட்டனர்.
மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் புதுச்சேரி அருகேயுள்ள தமிழ்நாடு கடற்கரை கிராமங்களில், அம்மாநில அரசு கடற்கரையில் கற்களை கொட்டியதாலும், பருவநிலை மாற்றத்தாலும் அருகேயுள்ள நான்கு புதுச்சேரி மீனவ கிராமங்களுக்குள் கடல் நீர் நுழையும் அபாயம் ஏற்படுவதாக கருத்து தெரிவிக்கின்றனர்.
கடல் சீற்றம் ஏற்பட்டது குறித்து கடற்கரையோர காவல்துறையினர் நேரில் சென்று பார்வையிட்டனர். புதுச்சேரி விரைந்து துாண்டில் முள் வளைவு அமைத்து தர வேண்டும் என அப்பகுதி மீனவ குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அனகா காளமேகன்







