நடிகை பார்வதி நாயர் தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும், பொய் புகார் அளிப்பதாகவும் அவரது வீட்டு பணியாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
நடிகை பார்வதி நாயர், நுங்கம் பாக்கம் காவல்நிலையத்தில் ஒரு புகார் அளித்திருந்தார். அதில், கடந்த அக்டோபர் மாதம் 20-ம் தேதி தனது வீட்டில் இருந்து ரூபாய் ஒன்பது லட்சம் மதிப்புள்ள இரண்டு கைக்கடிகாரங்கள், ஒன்றரை லட்சம் மதிப்புள்ள ஐபோன், ரூ. 2 லட்சம் மதிப்புள்ள லேப்டாப் ஆகியவற்றை வீட்டில் பணிபுரிந்து வந்த புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த சுபாஷ் சந்திர போஸ் திருடி சென்று விட்டதாக தெரிவித்திருந்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த நிலையில், சுபாஷ் சந்திர போஸ் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் தான் நடிகை பார்வதி நாயர் வீட்டில் பணிபுரிந்து வந்ததாகவும் தன்னை பார்வதி நாயர் அடித்து துன்புறுத்தி மன உளைச்சலுக்கு உள்ளாக்கியதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் தன் மீது அபாண்டமான திருட்டு பட்டம் சுமத்துவதாகவும் புகாரில் தெரிவித்துள்ளார்.
இரவு நேரங்களில் நடிகை பார்வதி நாயர் ஆண் நண்பர்களுடன் மது விருந்து நடத்திய போது, அதை தான் பார்த்ததால் பார்வதி நாயருக்கு தன் மீது கோபம் ஏற்பட்டதாகவும் அதனால் தான் வெளியில் சொல்ல வாய்ப்பு இருப்பதாக கூறி தன்னை அன்று முதலே அநாகரிகமாக நடத்தி வந்ததாகவும் சுபாஷ் சந்திரபோஸ் தெரிவித்துள்ளார்.
மேலும், தன்னை துன்புறுத்தி தன் மீது எச்சில் துப்பியதாகவும் ஆட்களை வைத்து அடித்ததாகவும் தெரிவித்துள்ளார். கடந்த 27 ஆம் தேதி, தான் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் பார்வதி நாயர் மீது புகார் அளித்ததால், என் மீதே புகார் அளிப்பாயா? என பார்வதி நாயர் என்னிடம் கோபமாக பேசி தன்னை பாலியல் வன்கொமை செய்ய முயன்றதாக மீண்டும் புகார் அளித்திருப்பதாக சுபாஷ் சந்திரபோஸ் குற்றம்சாட்டியுள்ளார்.