நாடுதழுவிய வேலைநிறுத்தம் காரணமாக தமிழ்நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகினர்.
பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதாக, மத்திய அரசை கண்டித்து நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பேருந்துகள் இயக்கப்படாததால் பணிக்கு செல்வோர், பள்ளி மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஈரோடு மாவட்டம் பவானி மற்றும் அந்தியூர் போக்குவரத்து பணிமனையில் இருந்து பேருந்துகள் இயக்கப்படாததால், குறித்த நேரத்திற்கு மாணவர்கள் பள்ளிக்கு செல்ல முடியால் அவதிக்கு ஆளாகினர். அந்தியூரில் இருந்து கர்நாடகா வரை இயக்கப்படும் அரசு பேருந்துகள் இயக்கப்படாததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதேபோல, விழுப்புரத்தில் 70% பேருந்துகள் இயக்கப்படாததால் பல மணி நேரம் பேருந்து நிலையத்தில் இருந்து காத்திருந்து தாமதமாக பணிக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. மாவட்டத்தில் அரசு பேருந்துகள் 70% இயக்கபடவில்லை இதன் காரணமாக பணிக்கு செல்பவர்களும், வெளியூர் பயணம் மேற்கொள்பவர்களும் அவதிக்குள்ளாகினர். அரசு பேருந்துகள் இயக்கப்படாததால் தனியார் பேருந்துகளில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதாக பயணிகள் தெரிவித்தனர்.
அண்மைச் செய்தி: அபுதாபி அமைச்சர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு
மேலும், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, ஆகிய மாவட்டங்களில் இருந்து நாள்தோறும் இயக்கப்படும் 865 பேருந்துகளில் 20% பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகிறது. பொது போக்குவரத்து குறைவாக உள்ளதால் காலை முதலே பணிக்கு செல்பவர்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் சிறு வியாபாரிகள் பேருந்துகள் கிடைக்காமல் பெரும் சிரமங்களை சந்தித்தனர். 2 மணி நேரத்திற்கு ஒரு முறை இயக்கப்பட்ட பேருந்துகளில் முண்டியடித்துக்கொண்டு ஆபத்தை உணராமல் பயணிகள் பேருந்துகளில் சென்றனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.