தொழிற்சங்கங்கள் போராட்டம் என்பது அவர்கள் எடுத்த முடிவு எனவும் மக்களுக்கு பாதிக்கப்படாத வகையில் தான் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது எனவும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஸ்மார்ட் வகுப்புகள் மற்றும் வருமுன் காப்போம் மருத்துவ திட்டத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் துவக்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘வருமுன் காப்போம் திட்டம்’ என்பது முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கொண்டுவந்த திட்டம். 2011க்கு பிறகு இந்தத் திட்டம் செயல்பாட்டில் இல்லை தற்போது மீண்டும் ‘கலைஞர் வருமுன் காப்போம் திட்டம்’ என்று நடைமுறைக்கு கொண்டு வந்த சிறப்பாக நடைபெற்று வருகிறது.இந்த திட்டம் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றதால் ஆயிரம் முகாமில் இருந்து 1250 முகாம் நடத்த அரசு முடிவு செய்துள்ளது.
தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டால் அவர்களுக்கு சம்பளம் பிடிக்கும் என்று தெரிவித்திருந்தார் அதன் அடிப்படையில்தான் போராட்டம் நடைபெற்று வருகிறது. பேருந்துகள் குறைவான அளவு இயக்கப்பட்டு வருவது, இந்த போராட்டம் தொழிற்சங்கங்கள் எடுத்த முடிவு. மக்களுக்கு பாதிக்கப்படாத வகையில் தான் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது” என தெரிவித்தார்.நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா மற்றும் ஆணையர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.








