விதி மீறல்கள் இருக்கும் பட்டாசு கடை மற்றும் பட்டாசு ஆலைகள் மீது கடும்
நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி ஆட்சியாளர் ரயில்வே மேம்பாலம் கட்டுவதற்கான
பணிகள் குறித்து நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, மாவட்ட ஆட்சியர்
ஜெயசீலன், சட்டமன்ற உறுப்பினர் அசோகன், மேயர் சங்கீதா இன்பம் ஆகியோர் ஆய்வு
மேற்கொண்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பின்னர் அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:
சிவகாசி சாட்சியாபுரம் ரயில்வே மேம்பால பணிகள் விரைவில் துவங்கப்பட
உள்ளது. ரயில்வே மேம்பாலம் கட்டுவதற்கான இடம் கையகப்படுத்தும் பணி முழுவதுமாக முடிந்து விட்டது. 64 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பாலம் கட்டும் பணிகள் விரைவில் துங்கப்பட உள்ளது. பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் சிரமப்படாத வகையில் பணிகள் மேற்கொள்ளப்படும். பட்டாசு கடை மற்றும் ஆலைகளில் விதிமீறல்கள் இருக்கும் எனில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். கடந்த இரண்டு நாட்களாக சிவகாசி பகுதிகளில் அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.