அம்பேத்கரின் நினைவு தினத்தையொட்டி அவருடைய முழு உருவச்சிலையை
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திறந்து வைத்தார்.
சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் 66வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் அவருக்கு மரியாதை செலுத்தினர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராக பதவி வகித்த டாக்டர் அம்பேத்கர், ஆசிரியராகவும், இதழாளராகவும், எழுத்தாளராகவும் சமூகநீதிப் புரட்சியாளராகவும் விளங்கியவர். இவருக்கு, இந்தியாவின் மிகச்சிறந்த உயரிய விருதான பாரத ரத்னா விருது, இவரது இறப்புக்குப் பின் 1990-ல் வழங்கப்பட்டது.
அவரை கவுரவிக்கும் வகையில் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் அம்பேத்கரின் முழு உருவச் சிலையை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திறந்து வைத்தார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, இந்தியாவின் தலைசிறந்த தலைவர்களில் ஒருவர், இந்தியாவை உருவாக்கியவர்களில் ஒருவர் அம்பேத்கர்.
சமூக சீர்திருத்தவாதி, தாழ்த்தப்பட்ட மக்களின் அடிப்படை உரிமைகளுக்காக போராடியவர் அம்பேத்கர். பிரிட்டிஸ் ஆட்சிக்காலத்தின் போது மகாத்மா காந்தியும், அம்பேத்கரும் சிறையில் சந்தித்து பேசியுள்ளனர். அம்பேக்தர் எதார்த்தனமானவர் என்று ஆளுநர் கூறினார்.