டீசல் விலை உயர்வை கண்டித்து காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக மாநில லாரி உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.
சேலம் மாவட்ட லாரி உரிமையாளர்களின் 72ஆவது வருடாந்திர மகா சபை கூட்டம் நடைபெற்றது. சங்கத்தலைவர் கிருஷ்ணசாமி தலைமையில் லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்கு பின்பு செய்தியாளர்களை சந்தித்த மாநில லாரி உரிமையாளர் சங்க பொருளாளர் தன்ராஜ், டீசல் விலை உயர்வால் லாரி உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறினார். பாஸ்டேக் முறையில் பல்வேறு சிக்கல்கள் உள்ளதால் சுங்கச்சாவடிகளில் பல மணி நேரம் லாரிகள் காத்திருக்கும் நிலை உருவாகி உள்ளது. மேலும், வரும் 15ஆம் தேதி முதல் வேலை நிறுத்தம் தொடங்குவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தேர்தல் காரணமாக மே 2ஆம் தேதிக்கு மேல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் தொடங்கும் எனவும் கூறினார்.







