ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்தே சென்று ஸ்டாலின் தேர்தல் பரப்புரை!

சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை நெடுஞ்சாலையில் நடந்தே சென்று குளித்தலை நகரில் ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார். ஈரோடு மாவட்டம் சித்தோட்டில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்,…

சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை நெடுஞ்சாலையில் நடந்தே சென்று குளித்தலை நகரில் ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார்.

ஈரோடு மாவட்டம் சித்தோட்டில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கொங்கு மண்டலத்தில் எண்ணற்ற நலத்திட்டங்கள் தங்கள் கட்சி ஆட்சியில்தான் நிறைவேற்றப்பட்டதாகக் கூறினார். திமுக அறிவித்ததை பின்பற்றிதான் பயிர்கடன் தள்ளுபடி உள்ளிட்ட திட்டங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

திமுக ஆட்சிக்கு வந்தால் ஈரோடு மாவட்டத்தில் புதிதாக பல்கலைக்கழகம், சட்டகல்லூரி, வேளாண்மை கல்லூரி அமைக்கப்படும் என்றும், அரசு மருத்துவமனையில் புற்றுநோய் பிரிவு உள்ளிட்ட ஏராளமான திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் மு.க.ஸ்டாலின் கூறினார். கொங்கு மண்டலம் தங்களுடையது என்று கூறும் அதிமுக, கொங்கு மண்டல மக்களுக்கு பல்வேறு துரோகங்களை செய்துள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்தார்.

மேலும், ஜிஎஸ்டி வரியால் கொங்கு மண்டலத்தில் தொழில் வளம் நசிந்துவிட்டதாகக் கூறிய மு.க.ஸ்டாலின், வேளாண் சட்டங்களை ஆதரித்ததன் மூலம் விவசாயிகளுக்கு அதிமுக அரசு துரோகம் இழைத்துவிட்டதாகக் கூறினார். திமுக வெளியிட்ட அறிவிப்பின் எதிரொலியாகவே பயிர்க் கடன் தள்ளுபடி உள்ளிட்ட நடவடிக்கைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மேற்கொண்டதாகவும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.