பாகிஸ்தானுக்கு 171 என்ற இலக்கை நிர்ணயித்த இலங்கை அணி

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் முதலில் பேட் செய்த இலங்கை அணி  பாகிஸ்தானுக்கு 171 என்ற இலக்கை நிர்ணயித்துள்ளது.   ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டி இலங்கை-பாகிஸ்தான் அணிகளுக்கிடையே இன்று…

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் முதலில் பேட் செய்த இலங்கை அணி  பாகிஸ்தானுக்கு 171 என்ற இலக்கை நிர்ணயித்துள்ளது.  

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டி இலங்கை-பாகிஸ்தான் அணிகளுக்கிடையே இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதனால்  முதலில் பேட் செய்த இலங்கை அணி  20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 170 ரன்கள் குவித்தது.

அதிகபட்சமாக பனுகா ராஜபக்ஷே அதிரடியாக விளையாடி 45 பந்துகளில் 71 ரன்கள் தனது அணிக்காக சேர்த்தார். பாகிஸ்தான் தரப்பில் ஹாரிஸ் ராப் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். இந்நிலையில் இலங்கை vs பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு 171 ரன்களை இலக்காக நிர்ணயித்ததுள்ளது இலங்கை அணி.

171 என்ற இந்த அபார இலக்கை பாகிஸ்தான் அணி எட்டி ஆசிய உலக கோப்பை போட்டியில் வெற்றியை பெறுமா என பெறும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது

 

 

 

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.