முக்கியச் செய்திகள்தமிழகம்செய்திகள்சினிமா

‘லியோ’ படத்தை திரையிடும் திரையரங்குகளை கண்காணிக்க சிறப்பு குழுக்கள் – சென்னை காவல் ஆணையர் தகவல்

‘லியோ’ திரைப்படம் திரையிடுவது தொடர்பாக, தமிழ்நாடு அரசு விதித்த கட்டுப்பாடுகளை மீறும் திரையரங்குகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்க சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய்-ன் லியோ திரைப்படம் திரையரங்குகளில் திரையிடுவது தொடர்பாக தமிழ்நாடு அரசு சில கட்டுப்பாடுகளுடன் அரசாணை பிறப்பித்துள்ளது. அதன்படி, வரும் 19 முதல் 24-ம் தேதி வரை திரையரங்குகளில் சிறப்பு காட்சி உட்பட தினசரி 5 காட்சிகள் திரையிடவும்,  காலை 09.00 மணிக்கு தொடங்கி அடுத்த நாள் அதிகாலை 01.30 மணிக்குள் 5 காட்சிகளை முடிக்க வேண்டும் எனவும் ஆணைகள் வெளியிட்டுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

லியோ திரைப்படத்தை திரையிடும் திரையரங்கு உரிமையாளர்கள், திரைப்படத்தை காண வரும் பொதுமக்களுக்கு தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள், வாகன நிறுத்துமிடங்கள் மற்றும் போக்குவரத்து சீராக செல்ல ஏற்பாடுகள் செய்ய வேண்டும் எனவும்,  அதிக கட்டணத்துக்கு டிக்கெட்டுகள் விற்பனை செய்யக்கூடாது எனவும் கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.

மேலும், இந்த அரசாணை தொடர்பாக திரையரங்குகளை கண்காணிக்க சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது எனவும், சென்னை பெருநகர காவல் ஆணையர் மற்றும் அனைத்து மாவட்ட ஆட்சியாளர்களும் கண்காணிக்க வேண்டும் எனவும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர், ‘லியோ’ திரைப்படத்தை திரையிடும் திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகிகள் அரசு வகுத்துள்ள கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும், அதிக கட்டணத்துக்கு டிக்கெட்டுகளை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதையும் படியுங்கள் : சென்னையில் புதிதாக 5 மெட்ரோ ரயில் நிலையங்கள் – ரூ.1817 கோடியில் ஒப்பந்தம்!!

இதற்காக, சென்னை பெருநகர காவல்துறையில் சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை மீறி செயல்படும் திரையரங்குகள், அதன் நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், திரையரங்குகளில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மற்றும் வன்முறை சம்பவங்களில் ஈடுபடுவோர் மீதும் நடவடிக்கை பாயும் எனவும் சென்னை காவல் ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Related posts

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி திருக்கோயில் ஆடித்தபசு தேரோட்டம்!

Web Editor

கோவாக்சின் சிறந்த செயல்திறனை கொண்டுள்ளது; WHO தலைமை விஞ்ஞானி

Halley Karthik

அயோத்தியில் முதல் நாள் தரிசனத்திற்கு வரும் மக்கள் கூட்டம் – தற்காலிக கூடாரங்கள் அமைத்து உபி அரசு சிறப்பு ஏற்பாடு!

Web Editor

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading