சென்னையில் 74 வயதான தாயாரின் வாழ்வாதாரத்திற்கு உதவி செய்யாமல் வெளிநாடு செல்ல முயன்ற மகனை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை, மயிலாப்பூர் கேசவ பெருமாள் கோயில் மேற்கு தெருவைச் சேர்ந்தவர்
துர்காம்பாள் (74). இவருக்கு இரண்டு ஆண் பிள்ளை மற்றும் ஒரு பெண் பிள்ளை
இருந்துள்ளனர். இவரது மூத்த மகன் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்துள்ளார். துர்காம்பாளின் கணவர் குப்புசாமி (90) உடல் நலம் பாதிக்கப்பட்டு கடந்த ஜூலை மாதம் 3ஆம் தேதி இறந்துள்ளார். இவர்களது இளைய மகன் ராமகிருஷ்ணன் (53) தனது குடும்பத்துடன் அமெரிக்க நாட்டில் சகல வசதிகளுடன் வாழ்ந்து வந்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தனது தந்தை இறந்த இறுதிச் சடங்குக்கு வராமல், பத்து நாள் கழித்து சடங்கிற்கு
வந்த ராமகிருஷ்ணன் தனது வயதான தாயார் துர்காம்பாள் வாழ்வதற்கு எவ்வித உதவியும் செய்யமால் இருந்து வந்துள்ளார். இதனால் விரக்தி அடைந்த
துர்காம்பாள் தனது மகன் ராமகிருஷ்ணன் மீது மயிலாப்பூர் காவல் நிலையத்தில்
தனக்கு உதவி பெற்றுத் தருமாறு புகார் அளித்தார். அந்தப் புகாரின் பேரில் ( 24
Maintenance and Welfare of Parents and Senior Citizens Act இல்) வழக்குப் பதிவு
செய்யப்பட்டது. இதனை அடுத்து ராமகிருஷ்ணன் கடந்த 22 ஆம் தேதி அதிகாலை 3
மணியளவில் அமெரிக்கா செல்ல முயன்றுள்ளார்.
அவரை சென்னை international Airport Immigration அதிகாரிகளால் தணிக்கை செய்யப்பட்டு காவல் நிலையத்திற்குத் தகவல் அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, விமான நிலையத்திற்குச் சென்ற மயிலாப்பூர் போலீசார் ராமகிருஷ்ணனை கைது செய்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். நீதிபதி சுப்பிரமணி முன்பு ஆஜர்படுத்தியதில், தனது அம்மாவுக்கு வங்கியில் 8 லட்சம் டெபாசிட் செய்வதாக ராமகிருஷ்ணன் உறுதி அளித்துள்ளார். இதனையடுத்து நீதிமன்ற ஜாமீனில் அவர் விடுவிக்கப்பட்டார். தற்போது மூதாட்டி துர்காம்பாள் தரமணியில் உள்ள தனது மகள் வீட்டில் வசித்து வருகிறார்.
-ம.பவித்ரா