சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே மின்சார ரயில்கள் இன்று ரத்து

சென்னையில் மின்சார ரயில் சேவையில் இன்று மற்றும் 31-ஆம் தேதி, நவம்பர் 7-ஆம் தேதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பரமாரிப்பு பணிகளுக்காக இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே காலை 11 மணிமுதல்…

சென்னையில் மின்சார ரயில் சேவையில் இன்று மற்றும் 31-ஆம் தேதி, நவம்பர் 7-ஆம் தேதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பரமாரிப்பு பணிகளுக்காக இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே காலை 11 மணிமுதல் மதியம் 2.30 மணி வரை இயக்கப்படும் மின்சார ரயில்களும், தாம்பரம்-கடற்கரை இடையே காலை 11.30 மணி முதல் மதியம் 3.30 மணி வரை இயக்கப்படும் மின்சார ரயில்களும் ரத்து செய்யப்படுகிறது.

கடற்கரை-செங்கல்பட்டு இடையே காலை 11.15 மணி, மதியம் 12, 1, 1.20, 2, 3 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள், கடற்கரை-தாம்பரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

செங்கல்பட்டு-கடற்கரை இடையே காலை 10.15, 11 மணி, மதியம் 12.25, 1.25, 2.15 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள் தாம்பரம்-கடற்கரை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. திருமால்பூர்-கடற்கரை இடையே காலை 10.40 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயிலும் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. பயணிகளின் வசதிக்காக மதியம் 1.30 மணிக்கு திருமால்பூரில் இருந்து கடற்கரைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.