காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக பரவி வரும் செய்திகள் தவறானது என்றும் தான் போட்டியில் இருந்து பின்வாங்க போவதில்லை என்றும் சசிதரூர் தெரிவித்துள்ளார்.
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு மல்லிகார்ஜூன் கார்கே, சசிதரூர் ஆகிய இரண்டு பேருக்கு இடையே நேரடி போட்டி இருந்து வருகிறது. இந்நிலையில், கட்சியின் பெரும்பாலான மூத்த தலைவர்கள் மல்லிகர்ஜூன கார்கேவுக்கு ஆதரவு தெரிவித்து வருவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றனர். மேலும் சோனியா காந்தி ஆதரவும் அவருக்கே இருப்பதாக தகவல் பரவி வருகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் ஒருசிலர் மட்டுமே சசிதரூருக்கு ஆதரவு அளித்து வருவதாக கூறப்படுகிறது. இதனிடையே மல்லிகர்ஜூன கார்கேவுக்கு வெளிப்படையான ஆதரவை சோனியா காந்தி அல்லது ராகுல்காந்தி தெரிவிக்கவில்லை. ஜனநாயக முறைப்படி யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம் என்பதை மட்டுமே வலியுறுத்தியுள்ளது.
இந்நிலையில், சசிதரூர் போட்டியில் இருந்து பின்வாங்குவதாக செய்திகள் பரவி வருகிறது. இதற்கு பதிலளிக்கும் விதமாக சசிதரூர் விளக்கமளித்துள்ளார். அதில், காங்கிரஸ் கட்சிக்கான தலைவர் பதவிக்கு போட்டியிடும் முடிவிலிருந்து பின்வாங்க போவதில்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். கடைசிவரை போட்டியில் கலந்து கொண்டு முடிவு வரை இருப்பேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தலைவர் தேர்தலில் தனது வேட்பு மனுவை திரும்ப பெற இருப்பதாக தகவல்கள் வெளியானது வதந்தி என விளக்கமளித்துள்ள சசிதரூர், தற்போது நடப்பது நட்பு ரீதியிலான போட்டி என்றும் போட்டி பாதையில் வெளியேறுவது எப்போதும் தனது பழக்கம் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
-இரா.நம்பிராஜன்