பிரபல பாலிவுட் நடிகரான ஷாருக்கானை, ரியல்மீ இந்தியா ஸ்மார்ட்போன் நிறுவனம் தனது விளம்பர தூதராக அறிவித்துள்ளது.
பிரபல ஸ்மார்ட்போன் நிறுவனமான ரியல்மீ தனது புதிய தயாரிப்புகளான ரியல்மீ 11 ப்ரோ மற்றும் ரியல்மீ 11 ப்ரோ+ ஆகியவற்றை, சீனாவில் இரண்டு வாரங்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தியது. இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் ஜூன் மாதம் இந்தியா உட்பட சர்வதேச சந்தைகளில் அறிமுகமாக உள்ளன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் பாலிவுட் திரையுலகின் பாட்ஷா, சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் ஷாருக்கானை, இந்தியாவில் ரியல்மீ நிறுவனத்தின் புதிய விளம்பர தூதராக இன்று அறிவித்துள்ளது.
இது குறித்து ஷாருக்கான் கூறியதாவது, “ரியல்மீ இன் ‘டேர் டு லீப்’ தத்துவம் என்னை மிகவும் ஈர்த்தது. இந்த நிறுவனத்தின் எல்லைகளைத் தாண்டிய அசைக்க முடியாத சாதனை, எனது சொந்த சிறப்புடன் ஒத்துப்போகிறது. உலகளவில் ரியல்மீயின் வளர்ச்சியை அதிகரிப்பதே நோக்கமாக கொண்டுள்ளோம். நான் ரியல்மீ நிறுவனத்தின் தூதரானதில் மகிழ்ச்சி அடைகிறேன். மேலும் சவால்களை ஏற்றுக்கொள்ளவும், அவற்றை தைரியமான எதிர்கொள்ளவும் ஊக்குவிப்பேன்” என்று கூறியுள்ளார்.