உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறை உருவாக்கப்பட்ட 10 தினங்களுக்குள் குறைதீர்ப்புப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
தனது தேர்தல் பரப்புரையின் போது ’உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற நிகழ்வின் மூலம் பெறப்பட்ட மனுக்களுக்கு 100 நாட்களுக்குள் தீர்வு காணும் பொருட்டு, உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற துறையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருவாக்கினார். அதற்கு சிறப்பு அலுவலர் நியமிக்கப்பட்டு கடந்த 9ஆம் தேதி அவரிடம் அனைத்து மனுக்களும் ஒப்படைக்கப்பட்டன.
அனைத்து மாவட்டங்களிலிருந்தும் 72 மரப்பெட்டிகளிலும் மற்றும் 275 அட்டை பெட்டிகளிலும் சுமார் 4 இலட்சம் மனுக்கள் இதுவரை இத்துறையில் பெறப்பட்டன.
அனைத்து மனுக்களும் மாவட்ட வாரியாக, வகை வாரியாகப் பிரிக்கப்பட்டு தமிழ்நாடு மின் ஆளுமை ( TNeGA ) மூலம் பராமரிக்கப்படும் வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. இதுவரை சுமார் 70,000 மனுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு மனுவும் வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டவுடன் அடையாள எண் வழங்கப்பட்டு , அடையாள எண்ணுடன் கூடிய குறுஞ்செய்தி ( SMS ) மனுதாரருக்கு அனுப்பப்படுகிறது
மனுக்களில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்கள் மற்றும் அதன் உண்மை தன்மைக்கேற்றவாறு தகுதியான ஒவ்வொரு மனுவும் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு உடனடி தீர்வு காண அனைத்து நடவடிக்கைகளும் மாவட்ட அலுவலர்கள் மேற்கொள்கிறார்கள்.
இதுவரை சென்னை , திருவள்ளூர் , இராணிப்பேட்டை , வேலூர் , திருவாரூர் , தேனி ஆகிய ஆறு மாவட்டங் களிலிருந்து பெறப்பட்ட 549 மனுக்களின் மீது முழுமையாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் செயல்படத் தொடங்கியதை குறிக்கும் வகையில், பத்து பயனாளிகளை நேரில் அழைத்து அவர்களுக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் நலத் திட்ட உதவிகளை வழங்கினார்.
….







