அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமாருக்கு அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ள நிலையில், அவர் ஆஜராக கால அவகாசம் கேட்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த மே மாதம் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய 40 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர் . கரூரில் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமாரின் வீட்டிலும் சோதனை நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக சென்னையில் உள்ள வருமானவரித்துறை அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜராகுமாறு அவருக்கு இரண்டு முறை சம்மன் அனுப்பப்பட்டது.
இதனிடையே சென்னையில் செந்தில் பாலாஜியின் வீடு மற்றும் தலைமை செயலகத்தில் உள்ள அலுவலகத்தில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். இதுதொடர்பாக விசாரிக்க அமலாக்கத்துறை சார்பிலும் அசோக்குமாருக்கு சம்மன் அனுப்பப்பட்டது.
அதாவது (ஜூன் 20) இன்று விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அமலாக்கத்துறை முன் அசோக்குமார் இன்று ஆஜராகவில்லை. அவர் விசாரணைக்கு ஆஜராக கால அவகாசம் கேட்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.