19 வயதுக்கு உட்பட்டோருக்கான பெண்கள் டி20 உலககோப்பை இறுதி போட்டியில் இங்கிலாந்தை இந்திய அணி சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது.
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 68 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதன்பின் களமிறங்கிய இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 69 ரன் எடுத்து வெற்றி பெற்றது. முதல் இரண்டு விக்கெட்டுகளை அடுத்தெடுத்து இழந்த இந்திய அணிக்கு, பின்னர் வந்த சவுமியா திவாரியும் கங்கோடி திரிஷாவும் சிறப்பாக விளையாடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றனர். கங்கோடி திரிஷா 24 ரன்கள் அடித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அணியின் வெற்றிப் பாதைக்குச் அழைத்துச் சென்ற கங்கோடி திரிஷாவின் சாதனை பயணம் தற்போது வெளிவந்துள்ளது. சிறுவயது முதலே கிரிக்கெட் மேலே ஆர்வம் கொண்ட கங்கோடி திரிஷாவின் கனவுக்கு அவரது தந்தை கங்கோடி உயிர் கொடுத்து இருக்கிறார்.
திரிஷாவின் கிரிக்கெட் ஆர்வத்தை பார்த்து ஆந்திர மாநிலத்தின் பத்ராசலத்திலிருந்து உள்ள தனது வீட்டை விட்டு குடும்பத்துடன் செகந்திராபாத்துக்கு சென்றுள்ளார். அதுமட்டுமல்லாமல் தான் நடத்தி வந்த ஜிம்மை நஷ்டத்துக்கு விற்று அங்கு சென்றுள்ளார். பின்னர் திரிஷாவின் பயிற்சிக்காக 4 ஏக்கர் நிலத்தையும் விற்றதாக கூறும் கங்கோடி ரெட்டி ஒரு முன்னாள் ஹாக்கி வீரர். ஆந்திர பிரதேச மாநில அணிக்காக விளையாடியவர். தற்போது தனது மகள் இந்திய அணியின் வெற்றிக்காக விளையாடியதை பார்த்துவிட்டு இந்த வெற்றிக்காக நான் என்ன வேண்டுமானாலும் இழக்க தயாராக இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
தனது ஜிம்முக்கு சென்று மீண்டும் வீட்டுக்கு கங்கோடி வரும்பொழுது திரிஷா கிரிக்கெட் போட்டிகளை டிவியில் பார்த்தாரா என்றுதான் கங்கோடி முதலில் தெரிந்து கொள்வாராம். கார்ட்டூன் போன்ற மற்ற நிகழ்ச்சிகளை பார்ப்பதைவிட கிரிக்கெட் பார்க்கவேண்டும் என்பதை சொல்லி வளர்த்துள்ளார். மேலும் திரிஷாவுக்கு 5 வயது இருக்கும் பொழுது ஜிம்முக்கு அழைத்துச் சென்று அங்கு திரிஷாவை பேட் பிடிக்கச் சொல்லி 300 பந்துகள் வீசுவேன் என்று தனது நினைவுகளை கங்கோடி கூறுகிறார்.