instagram மூலம் கஞ்சா விற்பனை

மதுரையில் இன்ஸ்டாகிராம் மூலம் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மூன்று கல்லூரி மாணவர்களை போலீசார் கைது செய்தனர். மதுரை மாநகர் பகுதியில் இருக்கக்கூடிய கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் புக் செய்தவுடன், இருக்கும் இடத்திற்கே…

மதுரையில் இன்ஸ்டாகிராம் மூலம் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மூன்று கல்லூரி மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.

மதுரை மாநகர் பகுதியில் இருக்கக்கூடிய கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் புக் செய்தவுடன், இருக்கும் இடத்திற்கே சென்று கஞ்சா குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் சப்ளை செய்து வருவதாக மதுரை மாநகர காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதனை தொடர்ந்து மதுரை மாநகரம் முழுவதும் காவல்துறையினர் சோதனையை தீவிரப்படுத்தினர். அப்போது, தல்லாகுளம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட கோரிப்பாளையம் பகுதியில் உள்ள மார்க்கெட் அருகில் சந்தேகத்திற்குரிய வகையில் நின்று கொண்டிருந்த மூன்று மாணவர்களை பிடித்து விசாரணை செய்தனர்.

விசாரணையில் அவர்களிடம் சுமார் 1.5 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. அவர்கள் 3 பேரும் மதுரை பசுமலை பகுதியில் இருக்கக்கூடிய தனியார் கல்லூரி மாணவர்கள் என்பதும் ஒருவர் கோரிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த கிஷோர், தெற்கு வாசல் பகுதியை சேர்ந்த மணிகண்டன் மற்றும் சந்தோஷ் குமார் என்பது தெரியவந்தது. மூன்று பேரையும் கைது
செய்த காவல்துறையினர் அவரிடம் நடத்திய முதல் கட்ட விசாரணை instagram மற்றும் மெசஞ்சர் மூலம் கஞ்சா விற்பனை செய்து வந்ததை கண்டுபிடித்தனர்.

கேட்பவர்களுக்கு நேரில் சென்று கஞ்சா பொட்டலங்களை விநியோகம் செய்து பணம் பெற்று வந்ததும் தெரிய வந்தது. அதனை தொடர்ந்து மூன்று பேரையும் கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மதுரையில் கல்லூரி மாணவர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

– இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.