தான் வாக்கு கேட்கவில்லை என்றும் வருங்கால சந்ததியினரின் வாழ்க்கையை கேட்பதாகவும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
திருவொற்றியூரில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இறுதிக்கட்ட பரப்புரையில் ஈடுபட்டார். திருவொற்றியூர் தொகுதிக்குட்பட்ட தேரடி பூந்தோட்டை பள்ளி வளாகத்தில், நடைபயிற்சி சென்றவர்களிடம் பூப்பந்து விளையாடியபடி, சீமான் வாக்கு சேகரித்தார். இதையடுத்து, திருவொற்றியூர் பேருந்து நிலையம் முதல் காலடிபேட்டை வரை, நாம் தமிழர் கட்சியினர் பேரணி சென்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதை தொடர்ந்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய சீமான், இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க வேண்டும், என கேட்டுக் கொண்டார். விவசாயத்தை செழுமையாக்கவும், விவசாயிகளுக்கு ஆதரவாகவும் பல திட்டங்கள் வைத்திருப்பதாகவும், அவர் கூறினார்.