தஞ்சை பெரிய கோயிலில் சித்திரை பெருவிழாவின் இரண்டாம் நாளையொட்டி அஸ்திரதேவர் நான்கு வீதிகளிலும் ஊர்வலமாக சென்று மக்களுக்கு அருள் பாலித்தார்.
உலகப் புகழ்பெற்ற இராசராச சோழனால் கட்டப்பட்ட தஞ்சை பெரிய கோயிலில் சித்திரை திருவிழா ஆண்டுதோறும் 18 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு சித்திரை திருவிழாவுக்கான பந்தக்கால் முகூர்த்தம் கடந்த மார்ச் 3 ஆம் தேதி நடப்பட்டது. 18 நாட்கள் நடைபெறும் சித்திரை பெருவிழா நேற்று முன் தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் இரண்டாம் நாளான நேற்று அஸ்திரதேவர் பல்லக்கில் நான்கு வீதிகளிலும், மேள வாத்தியங்கள் முழங்க மங்கல இசையோடு ஊர்வலமாக சென்று மக்களுக்கு அருள் பாலித்தார்.
சித்திரை பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சித்திரை தேரோட்டம் வருகிற மே 1 ஆம் தேதி காலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
—சௌம்யா.மோ
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.