விடுமுறை முடிந்து பிளஸ் 2 மாணவர்களுக்கு இன்றுமுதல் (ஜூன் 20) பள்ளிகள் திறக்கப்படவுள்ளன.
பிளஸ் 1 வகுப்பு பொதுத் தேர்வு கடந்த மே 10 முதல் மே 31ஆம் தேதி வரை நடைபெற்றது. அதன் பின்னர் மாணவர்களுக்கு 19 நாள்கள் விடுமுறை அளிக்கப்பட்டது. இதற்கிடையே 1 முதல் 10ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு விடுமுறை முடிந்து புதிய கல்வியாண்டில் (2022-23) பள்ளிகள் ஜூன் 13ஆம் தேதி முதல் திறக்கப்பட்டு பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
விடுமுறை நிறைவடைந்ததையடுத்து, பிளஸ் 2 மாணவர்களுக்கு வகுப்புகள் இன்று (ஜூன் 20) முதல் தொடங்கவுள்ளன. பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு புத்துணர்வுப் பயிற்சி வகுப்புகள் நடத்த ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வரும் வெள்ளி வரை 5 நாட்கள் புத்தாக்கப் பயிற்சி மேற்கொள்ளப்படவுள்ளது. மேலும், மாணவர்களுக்கு இன்றே புத்தகங்களும் விநியோகிக்கப்படவுள்ளன.
-ம.பவித்ரா